ஒற்றை நரம்பை மட்டும்
பற்றி இழுத்து
உருவி எடுப்பதுபோல்
தோன்றும்
பிரிய உறவின்
பிரிவின் வலியை
வெளிப்படுத்த கூடாதென
விழிகளை
மேலும் கீழும் உருட்டி
கண்ணீர்த்துளிகளை
உள்ளிழுத்து
துடிக்கும் உதட்டை
இழுத்து பிடித்து
வலிகள் மறைத்து
புன்னகை புரிந்து
நிற்பதுவும்
வாழ்க்கை கற்றுத்தந்த
சவாலான பக்குவமே...
சில மணிகளோ
சில நாட்களோ
சில வருடங்களோ
இல்லை
ஆயுளுக்கும் நிரந்தரமோ..
பிரிவு என்பது
எப்பொழுதும்
வலிகள் மட்டுமே தரும்
வரம் தான்..
ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டுமென
எத்தனைவிதமாகவோ
தனக்குதானே
உணர்த்தினாலும்...
எதிலெதிலோ
மனதை செலுத்தி
வாழ்க்கை பயணத்தை
தொடர்ந்தாலும்
மழை துளியின்
குளிர் ஸ்பரிசமாய்
கோடையின்
சுடும் வெயிலாய்
ஒரு தாக்கம்
ஊசலாடவே செய்கிறது
பிரிவை சுமக்கும்
பாழும் மனதில் ..
ஆறடி குழிக்குள்
அடக்கம் பண்ணிய
பின்பாவது அடங்குமா
இந்த பிரிவின் வலி!!
பற்றி இழுத்து
உருவி எடுப்பதுபோல்
தோன்றும்
பிரிய உறவின்
பிரிவின் வலியை
வெளிப்படுத்த கூடாதென
விழிகளை
மேலும் கீழும் உருட்டி
கண்ணீர்த்துளிகளை
உள்ளிழுத்து
துடிக்கும் உதட்டை
இழுத்து பிடித்து
வலிகள் மறைத்து
புன்னகை புரிந்து
நிற்பதுவும்
வாழ்க்கை கற்றுத்தந்த
சவாலான பக்குவமே...
சில மணிகளோ
சில நாட்களோ
சில வருடங்களோ
இல்லை
ஆயுளுக்கும் நிரந்தரமோ..
பிரிவு என்பது
எப்பொழுதும்
வலிகள் மட்டுமே தரும்
வரம் தான்..
ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டுமென
எத்தனைவிதமாகவோ
தனக்குதானே
உணர்த்தினாலும்...
எதிலெதிலோ
மனதை செலுத்தி
வாழ்க்கை பயணத்தை
தொடர்ந்தாலும்
மழை துளியின்
குளிர் ஸ்பரிசமாய்
கோடையின்
சுடும் வெயிலாய்
ஒரு தாக்கம்
ஊசலாடவே செய்கிறது
பிரிவை சுமக்கும்
பாழும் மனதில் ..
ஆறடி குழிக்குள்
அடக்கம் பண்ணிய
பின்பாவது அடங்குமா
இந்த பிரிவின் வலி!!