பயணங்கள் ஒருபோதும்
சலிப்பதே இல்லை !
குழந்தையாய் குதூகலிக்கவும் வைக்கும்
பொறுப்பாய் இருக்கவும் செய்யும்
முகங்களை படிக்கவும் வைக்கும்
நினைவுகளை சேகரிக்கவும் செய்யும்
தூரத்தில் மெதுவாய் கடக்கும் மலைத்தொடரையும்
அருகே சட்டென்று கடக்கும் காற்றாலையையும்
பிரமிப்பாய் பார்க்கும்
அந்திசாயும் சூரியனையும்
உலாவரும் பிறைநிலவையும்
விடாமல் வேடிக்கை பார்க்கும்
மழலையின் குறும்பை ரசித்து
முதுமையின் தனிமையை இயலாமையோடு பார்க்கும்
வெயிலைச் சலிக்கும்
சாரலை சிலாகிக்கும்
கூட்டத்தை வெறுக்கும்
நட்பை பாராட்டும்
சில முகச்சுளிப்புகள்
சில கண்ஜாடைகள்
சில புன்னகைகள்
சில உரையாடல்கள்
சில வாக்குவாதங்கள்
என பல்கலைக்கழக பாடங்களாய்
கற்றுத்தருகிறது வாழ்வை..
பயணங்கள் ஒரு போதும்
சலித்ததேயில்லை !
No comments:
Post a Comment