அவளிடமிருந்து
ஒற்றை முத்தம்
பெறுதல்
அவ்வளவு எளிதல்ல..
எவ்வித கெஞ்சலுக்கும்
எத்தனைவித கொஞ்சலுக்கும்
மிட்டாய் லஞ்சத்திற்கும்
சற்றும் மசிய மாட்டாள்
ஆனால்..
சட்டென்று
பெருந்தூரலாய்
நிலத்தில் விழும்
மழையைப் போலவே
எதிர்பாரா தருணத்தில்
தானாகவே
கட்டிக் கொள்வாள்
கழுத்தை
ஈரம் பிசுக்கும்
வாயால்
முகமெங்கும்
முத்தாடுவாள்
ஆம்..
அவள் என்
பெரும் மழை..
பேரின்ப மழையும்
அவளே !! 💕💕
No comments:
Post a Comment