ஐப்பசி மாசத்துல
அப்பி பிடிக்கும் என்ற
அப்பத்தாவின் வார்த்தைகள்
மனதில் எதிரொலியாய்
வாய்ல வச்சா
விசமாம்டி என்று
தோழிகளோடு
அளவாடியபடியே
அம்மியில் அரைபட்டது
இலைகளோடு
கொட்டைபாக்கும் புளியும்
அவசரகதியில் முடிக்கப்பட்ட
இரவு உணவில் பசி மறைய
முற்றத்தில் அமர்ந்தபடியே
வரிசையாக
நீட்டப்பட்ட கரங்களில்
அம்மா வார்த்தாள்
குட்டி மருதாணி தோசை
எப்பொழுது விடியும்
என எதிர்பார்ப்போடு
எப்பொழுது தூங்கினோம்
என அறியாத
இரவின் முடிவில்
தலையணையில்
கொஞ்சம்
தலையில்
கொஞ்சம்
தள்ளியிருந்த தங்கையின்மேல்
கொஞ்சம் போக
மீதியிருந்த காய்ந்த மருதாணி
சிவப்பேறிய கரங்களில்
பார்த்ததுமே
அப்படியொரு பரவசமும்
அவளைவிட எனக்கு தான்
செவந்திருக்கு
என மனதில் பெருமிதமாய்...
இப்படியாக
அரங்கேறியது
ஒரு மருதாணி திருவிழா 💕
சூப்பர்
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteArumai💐💐💐
ReplyDelete