Tuesday, 7 July 2020

என் சிநேகிதனே !

சிலந்தி
வலையத்தனை போல
மெல்லிய நூலளவு
இடைவெளி கோடு
நமக்கிடையே..

அது
அப்படியே இருக்கட்டும்..

இப்பொழுதோ
எவ்வித தயக்கமின்றி
உன்னுடன்
எல்லாவற்றையும் பகிர்கிறேன்..

அது இல்லையெனில்
நமக்கிடையே
உருவமில்லா சுவர்
எழுப்பப்படும்..

ஏகமான எதிர்பார்ப்புகளால்
காரணமின்றி காயங்கள்
நிகழக்கூடும்..

அம்மாயவலை
எந்த நொடியும்
அறுந்து விட
கூடாதென்பதுவே
என் பிரார்த்தனை..

சாத்தியமாகாது
என தெரிந்தும்
சண்டித்தனம்
செய்யும் மனதிற்கு
கடிவாளமிட்டுக் கொள்..

அதுதான் எப்பொழுதும்
ஆகச்சிறந்தது..

உன்னையும்
இழக்க விரும்பவில்லை
என் சிநேகிதனே!! 💕