கண்ணீரோடு விடும்
சாபம் பலிக்குமாம்..
யார் சொன்னது ?
கைம்பெண்ணாய் மாறிய
பெண்களின் கண்ணீரிலும்
அநாதையாய் திரியும்
பிள்ளைகளின் கண்ணீரிலும்
செழித்தோங்கி
கோடிகளில் புரள்கிறது
டாஸ்மாக் வியாபரம்
காதலித்துப் பார்..
கனவுகள் அதிகமாகும்..
புன்னகை முகமாகும்..
சந்தோசம் இரட்டிப்பாகும்..
நடப்பதே மிதப்பதாகும்..
உரிமைகள் கூடும்..
எதிர்பார்ப்புகள் எகிரும்..
கோபங்கள் பிறக்கும்..
சண்டைகள் நிகழும்..
இம்சைகள் இம்சிக்கும்..
சிங்கிளாய் இருக்க மனம் ஏங்கும்..
காதலித்துப்பார் 💕💕