நான் எங்கே என
எனைத் தேடும் மனமே
இனி
எனைத் தேடாதே..
உருகி கரைந்து
மறைந்து தொலைந்து
கொண்டிருக்கிறேன்
அவன் பிரியம்
என்னும் தணலில்...
எனைத் தேடாதே மனமே..
ஆம்..
கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்கொண்டு
எனை உருக்கித் தீர்க்கிறது
மொத்தமாய்
அவன் பிரியமெனும்
தணல்..
ஆனாலும்..
இத்தணலின் ஸ்பரிசம்
விநோதமானதே!!
பூவிதழில் தங்கும்
மழைத்துளியானது
சற்றே
சிதறித் தெளித்து
சிலிர்த்திட செய்யும்
குளுமையோடு
ஆக்கிரமிக்கும்
பிரியத்தின் தணல்
இது ..
இன்னும் இன்னும்
என
இன்னும் கொஞ்சம்
உருகிக் கொள்கிறேன்..
ஆகையால்...
என் மனமே
நீ ஓய்வெடு..
எனைத் தேடாதே 💕💕