அவதார் உலகத்தையும் விட
விசித்திர அழகானது
மழலைகளின் உலகம்..
நடு ராத்திரியில்
கால் மிகவும் சுடுகிறது
காய்ந்து போன காயத் தடம்
பார்க்கும் பொழுதெல்லாம் வலிக்கின்றது
தினமும் ஒரு
நிலா தோசை வருகின்றது
அதிகாலைச் சூரியன்
ஆரஞ்சு பழமாகிறது
சாலையில் செல்பவர்களில் பலர்
பூச்சாண்டி ஆகிவிடுகிறார்கள்
நோட்டை விட சில்லறைக்கு
மதிப்பு அதிகம்
நேத்திக்கு வரேன் என காலங்களை
குழப்பிவிடுவது..
இப்படி இப்படியாக ...
இன்னும் இன்னுமாக...
தெரிந்தால் சொல்லுங்களேன்..
யாரிடம் மனு கொடுக்க வேண்டும்..
இந்த விசித்திர உலகத்தில்
சின்னஞ்சிறு இடத்தில்
வசிக்கும் குடியுரிமை
பெற்றுச் செல்ல 😍😍