இப்படித்தான்
எனது காதலை
சொல்லத் தெரிகிறது..
கடந்து செல்லும் பொழுது
செல்ல இடிஇடித்தும்
தூங்கும் பொழுது
மீசையை பிடித்திழுத்தும்
சாப்பிடும் பொழுது
விரல்கடித்து கவளம் வாங்கியும்
வீட்டுக்குள் வரும் நேரம்
கதவுபின் ஒளிந்து
கண்ணாமூச்சி காட்டியும்
என் காதலை வெளிப்படுத்துகிறேன்..
சிறுபிள்ளைத்தனமாய்
இருந்தாலும்
என் பெரும் காதல் இது 💕💕