தீராக் காதலில்
திளைத்துக்
கொண்டிருக்கிறாய்..
இருந்து கொள்..
ஆனால்.......
பலமாய்
பற்றிக் கொண்டிருக்கும்
உன் பேரன்பின்
இறுக்கமான
பிடிதனில்
தன் வர்ணம் இழந்து
பலம் இழந்து
விரக்தியடைந்து
மெல்லச் சாகும்
பட்டாம்பூச்சியை
ஏதேனும்
எறும்புகள்
இழுத்துச் செல்லும்
பொழுதாவது
அறிந்து கொள்வாயா ??
மென்மையான
பட்டாம்பூச்சிக்கும்
மெல்லிதயம்
உண்டென்று.. !??
என்னவொரு ஆழமிக்க கவிதை!!!
ReplyDeleteAnna😍😍
Delete😍😍😍😍 azagana words.semma kavidhai
ReplyDeleteTq dear😍😍
Delete