அவளும் ஆழி தான்... 💕💕
அமைதியாய் திரியும்
அவளின் ஆழ்மன தத்தளிப்பை
அவளின்றி யாரும்
அவ்வளவு எளிதில் அறிவதில்லை..
எத்தனை எத்தனை
கஷ்டங்களையும்
தனக்குள்
உள்ளிழுத்துக் கொள்வாள்
கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல்...
எத்தனை சூறாவளி புயல் போராட்டங்கள் வந்து
கொந்தளிக்க வைத்தாலும்
அவ்வளவு எளிதில்
அவள் தனக்கான எல்லையை
தாண்ட மாட்டாள்..
அப்படி தாண்டினால் என்றால்
நிச்சயம் பேரழிவு தான்
அவளைச் நிச்சலனப்படுத்திய அத்தனைபேருக்கும்
ஆனால்...
அவளை அறிந்தவர்களுக்கு
அவள் ஒரு ஆழக்கிடக்கும் பொக்கிஷம்
அவள் ஒரு மறைந்திருக்கும் புதையல்
அவள் ஒரு தனித்துவ எழில் ஓவியம்
அவள் ஒரு ரசனைமிக்க அழகுக்காரி
அவள் ஒரு அழியாத பாசக்காரி
ஏனெனில்
அவளும் ஆழி தான் 💕💕