நான் கோபமாய் இருக்கிறேன்!
உம்மென்று
நான் வலம்வரும்
இடமெல்லாம்
உன் கண்கள்
மேய்வதை கண்டு
இதழோரம் புன்னகைப்பதை பார்த்தாயா
கோபத்தின் அடர்த்தியை
உணர்த்தும்
ணங்கென வைக்கும் பாத்திரங்களின் சத்தமும்
குறைந்துவிட்டதை அறிவாயா
ஏனடா தாமதம் என
முதுகுகாட்டி இருப்பவளின் உதடுகள்
முணுமுணுப்பை
அறிந்தாயா
இல்லையெனில்
விரைவில் முற்றுப்புள்ளி
வையடா இச்சிறு நாடகத்திற்கு..
ஏனெனில்
நான் கோபமாய் இருக்கின்றேன் 💕
No comments:
Post a Comment