அலட்சிய புன்னகை
எடுத்தெரியும் பேச்சு
கோபப்பார்வையோடு
இருப்பவளை
திமிரானவள் என
உடனே அறிக்கையிட்டு
கூவாதீர்கள்
யாருக்குத் தெரியும்..
இப்பிரபஞ்சத்தின்
கொடூரப் பிடியினின்று
தப்பிப்பிழைக்க
சாத்தான் வேடமிட்ட
தேவதையாகவும் இருக்கலாம் !
அலட்சிய புன்னகை
எடுத்தெரியும் பேச்சு
கோபப்பார்வையோடு
இருப்பவளை
திமிரானவள் என
உடனே அறிக்கையிட்டு
கூவாதீர்கள்
யாருக்குத் தெரியும்..
இப்பிரபஞ்சத்தின்
கொடூரப் பிடியினின்று
தப்பிப்பிழைக்க
சாத்தான் வேடமிட்ட
தேவதையாகவும் இருக்கலாம் !
ஒரு பிரிவினால் என்ன செய்துவிட முடியும்?
ரணமாய் வேதனை தரும்
உயிர்கரைய அழுது தொலையும்
விரக்தியாய் பேச வைக்கும்
நினைவுகளை சுமந்து அலையும்
காலங்கள் உருண்டோட எதோ ஒரு தருணத்தில் யோசித்து பார்த்து மெல்ல நகைக்கும்
அவ்வளவுதானே !!
ஒரு காதலை உணராமல் இருக்கிறீர்களா?
ஒரு பிரிவை அழாமல் கடக்கிறீர்களா?
ஒரு நட்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கீர்களா?
ஒரு துரோகத்தை சந்திக்காமல் இருக்கிறீர்களா?
இல்லையெனில்..
நீங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை.