ஊன் மறந்து
உறக்கம் துறந்து
சுத்தம் விடுத்து
கவனமாய் வளர்த்து
நோயில் தவித்து
எழிலில் மகிழ்ந்து
குறும்புகளை ரசித்து
தவறுகளை திருத்தி
சரிகளை பாராட்டி
உன் புன்னகைக்காக
என் தேவை குறைத்தது
எல்லாம்
இயலாத காலத்தில்
எனை கவனித்துக் கொள்வாய் என்றல்ல..
நீ என் உயிரின் உயிர் என்பதாலயே 💕💕
No comments:
Post a Comment